For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துணை ஆணையர் அரவிந்த் மாற்றம் - சென்னை உளவுத்துறை இணை ஆணையராக தர்மராஜ் நியமனம்!

06:25 AM Jul 03, 2024 IST | Web Editor
துணை ஆணையர் அரவிந்த் மாற்றம்   சென்னை உளவுத்துறை இணை ஆணையராக தர்மராஜ் நியமனம்
Advertisement

சென்னை உளவுத்துறை துணை ஆணையர் அரவிந்த் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை இணை ஆணையராக தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டின் உளவுத்துறையில் திடீரென முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் நடக்க போகும் பெரிய மாற்றத்திற்கான முன்னோட்டம் இது என்று தமிழ்நாடு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பெருநகர காவல் உளவுத்துறை பிரிவு 1ன் துணை ஆணையர் அரவிந்த், திருச்சி தலைமையிட துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை பெருநகர காவல், சட்டம் ஒழுங்கு பிரிவு (கிழக்கு) இணை ஆணையர் தர்மராஜன், உளவுத்துறை பிரிவு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். துணை ஆணையர் அந்தஸ்தில் இருந்த உளவுத்துறை பிரிவு 1, இணை ஆணையர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வௌியிட்டுள்ள உத்தரவில், ‘‘சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருந்த தர்மராஜ், சென்னை மாநகர உளவுத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஆணையர் பதவி, இணை ஆணையர் பதவியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை மாநகர உளவுத்துறை துணை ஆணையராக இருந்த அரவிந்த் திருச்சி, தலைமையிட துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement