For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிசம்பர் 14-ல் தேமுதிக பொதுக்குழு கூட்டம் | விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு!

04:24 PM Dec 11, 2023 IST | Web Editor
டிசம்பர் 14 ல் தேமுதிக பொதுக்குழு கூட்டம்   விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு
Advertisement

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிச.14ம் தேதி நடைபெறும் என்றும் அதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.  கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்தின் உடல் நிலை,  ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது எனவும்,  தொடர்ந்து ஒரு நேரம் போல் மற்றொரு நேரம் அவருடைய உடல் நிலை சீராக இருப்பதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  சளி அதிகமாக உள்ளதால் சுவாசத்தில் அவ்வப்போது சிரமம் ஏற்படுவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வதந்திகள் அவ்வப்போது வெளியாகியபடி இருந்தன.  இதனையடுத்து விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து,  தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு தொடர்பாக அக் கட்சியின் தலைமை அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில்,  பொதுக்குழுக் கூட்டம் வரும் 14.12.2023 வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement