For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!

01:45 PM Nov 20, 2023 IST | Web Editor
சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
Advertisement

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில்,  தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது.  மறுநாள்(17-ந்தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது.  இதையடுத்து சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.  சன்னிதானம் நடைப்பந்தல்,  பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.  தினமும் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து செம்மர தூண் திருட்டு – ஆவடியில் பரபரப்பு!

இதுவரை 1,61,789 பேர் தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவித்தது.  இந்நிலையில் வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க சாமி தரிசனம் செய்யும் நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டதில் இருந்து மதியம் 1 மணி வரையிலும்,  பின்பு மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 16 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags :
Advertisement