Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TrainCancelled | டானா புயல் எதிரொலி... 28 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

08:35 PM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (அக்.21) காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்.23) புயலாக மாறும். இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, நாளை மறுநாள் (அக்.24) வடமேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் புரி – மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:

அக்டோபர் 23 ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :

அக்டோபர் 24 ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :

Tags :
CycloneCyclone AlertCyclone Dananews7 tamilSourthern RailwayTrainTrain cancel
Advertisement
Next Article