For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

08:16 AM Dec 23, 2023 IST | Web Editor
குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Advertisement

வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

இதையும் படியுங்கள் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்!

இந்நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் மற்றும் ஐயப்ப சீசன் என்பதால் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags :
Advertisement