Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் கனமழை எதிரொலி | டெல்லியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

09:57 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Advertisement

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை பொருள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக சந்தைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.  குறிப்பாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள மொத்தவிலை சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை வணிகத்திலும், ஆன்லைனிலும் தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும் தொடர் மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் வாகனங்களால் காய்கறிகளை கொண்டுவர முடியவில்லை எனவும் இதன் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
DelhiDelhi RainsHeavy rainfallRainTomatotomato price hike
Advertisement
Next Article