Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் கனமழை எதிரொலி! - செம்பரம்பாக்கம் ஏரியில் 90% நீர் நிரம்பியது...

10:04 AM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியது

Advertisement

சென்னைக்கு குடிநீர் வழங்கும்,  பூண்டி,  புழல்,  செம்பரம்பாக்கம்,  சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளுக்கு மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். 

இந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 5 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 8,806 கன அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 75 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளது.  மேலும், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் புதன்கிழமை வரை 22.04 அடிநீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் 91 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!

மேலும்,  ஏரிக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஏரி முழுமையாக நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே தேவைப்படுகிறது. மழை நீடித்தால் ஏரி நிரம்பி உபரி நீர் அடையாற்றில் கூடுதலாகத் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் புதன்கிழமை 18.67 அடியாக உயர்ந்துள்ளது.  ஏரிக்கு நீர்வரத்து 606 கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 189 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் 34.59 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. அதே போல்,  35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 30.51 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.  ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 120 கன அடியாக உயர்ந்துள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 14.37 அடியாக உயர்ந்துள்ளது.

Tags :
90percentChennaiContinuousfilledHeavyRainSembarambakkam LakeTamilNaduWater
Advertisement
Next Article