For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடரும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

06:58 AM Dec 18, 2023 IST | Jeni
தொடரும் கனமழை   எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

கனமழை பெய்து வருவதன் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முன்னதாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால், பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கனமழை காரணமாக கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், கொடைக்கானல் தாலுகாவிலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement