For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடரும் அதி கனமழை - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வெள்ள நீர்!

09:56 AM Dec 18, 2023 IST | Web Editor
தொடரும் அதி கனமழை    நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வெள்ள நீர்
Advertisement

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : தொடர் கனமழை | தென் மாவட்டங்களுக்கு பால் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவின் நடவடிக்கை! 

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பிற்பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வாளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நிர் வரத்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ( டிச.17) இரவு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்று நீர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement