Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆகஸ்ட் 21-ல் இளநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு” - அமைச்சர் மா.சுப்ரமணியன்!

01:37 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக
கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரை வடசென்னை
மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.358 கோடியே 87 லட்சம் செலவில் 2,68, 615 சதுர அடி
பரப்பில் ஆறு தளங்களுடன் 12 அறுவை சிகிச்சை அரங்கங்களும், கூட்டு அறுவை அரங்கம், ஆசியாவிலேயே புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைபிரிட் அறுவை அரங்கம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தில் 441 படுக்கை
அமைக்கப்பட உள்ளது.

அதேபோல்  2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணிக்கு
தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில்
விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மருத்துவ தேர்வு குழு
மூலமாக முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. முதற்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிய பின்னர் அரசு பள்ளி மாணவர்கள 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு துறை மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒதுக்கீடு மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு ஒதுக்கீடு ஆகிய நான்கு பிரிவினருக்கான கலந்தாய்வு 22 ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி நடைபெறும்.

தமிழ் நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்களும், இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்களும் மூன்று மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்களும் மொத்தம் தமிழ்நாட்டில் 9050 மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல் பிடிஎஸ் பல் மருத்துவ படிப்பில், மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன.

இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீடிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும்,
வீடியோஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை. ஆறு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தமிழகத்திலிருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Advertisement
Next Article