For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?"  - விசிக தலைவர் திருமாவளவன்!

07:15 AM Apr 01, 2024 IST | Web Editor
 இந்த அவமதிப்பு  அவர் பெண்மணி என்பதாலா  அல்லது பழங்குடி என்பதாலா  அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா       விசிக தலைவர் திருமாவளவன்
Advertisement

"இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?"  என விசிக தலைவர் திருமாவளவன் X தள பதிவு செய்துள்ளார்.

Advertisement

நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களை கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில், மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ,  பத்ம பூஷன்,  பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.  இதில், ‘பாரத ரத்னா’ விருது  நாட்டிலேயே மிக உயரிய விருதாகும்.  இதையடுத்து, இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ்,  சரண் சிங்,  பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன்,  மறைந்த முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கர்பூரி தாக்கூர்,  பாஜக தலைவராகவும் துணை பிரதமராகவும் பணியாற்றிய எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : CSK வின் ஹாட்ரிக் வெற்றியை தடுத்து நிறுத்திய டெல்லி அணி – ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த தோனியின் மாஸான ஃபினிஷிங்!

பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் மார்ச் - 30 ஆம் தேதி நடைபெற்றது.  இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதையடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ்,  சரண் சிங், எம்.எஸ். சுவாமிநாதன், மறைந்த முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கற்பூரி தாக்குர் உள்ளிட்டோருக்கு மார்ச் 30 ஆம் தேதி வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில்,  டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீட்டிற்கு நேற்று (மார்ச் 31) நேரில் சென்று  பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அப்போது பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அமர்ந்திருந்தனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நின்றிருந்தார். அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது x தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

"பிரதமர், மேனாள் துணைபிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பது கூட தெரியாதா? இந்த அவமதிப்பு - இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது"

இவ்வாறு திருமாவளவன் தனது x தளத்தில் பதிவு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement