For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்தடுத்து டக் அவுட் - 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!

09:43 PM Jan 03, 2024 IST | Web Editor
அடுத்தடுத்து டக் அவுட்   153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி
Advertisement

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகேஷ் குமாருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Advertisement

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், கேப்டன் டீல் எல்கர் களத்தில் இறங்கினர். எய்டன் மார்க்ரம் 2 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜ் பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து வீரர்கள் ஆட்டமிளந்த நிலையில், 55 ரன்களில் 23.2 ஓவர்களில் அனைத்து வீரர்களும் ஆட்டமிளந்தனர்.

பும்ரா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தவிர மற்ற 6 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி 55 ரன்களில் சுருட்டி ஓர் சாதனையை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் வரலாற்றில் அந்த அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

இதையடுத்து, இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தபோது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ரோஹித் சர்மா 39 ரன்களும், சுப்மன் கில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிளந்தனர். விராட் கோலி 59 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். கே.எல். ராகுல் 8 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார்.

33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 34 வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இதன் முதல் பந்தில் கே.எல். ராகுலும், 3வது பந்தில் ரவிந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும், 5வது பந்தில் பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 34 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. 35வது ஓவரை ககிசோ ரபாடா வீச 2வது பந்தில் விராட் கோலி எய்டன் மார்கரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

4வது பந்தில் சிராஜ் ரன் அவுட் ஆக, 5 ஆவது பந்தில் பிரசித் கிருஷ்ணா ரன் ஏதும் எடுக்காமல் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அடுத்து 1 ரன் சேர்ப்பதற்குள்ளாக மீதம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ரவிந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட் ஆகினர்.
Tags :
Advertisement