For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கந்த சஷ்டி விழா நிறைவு நாள் - சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்...

10:41 AM Nov 20, 2023 IST | Web Editor
கந்த சஷ்டி விழா நிறைவு நாள்   சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்
Advertisement

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்
ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த ஆறு நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையும் படியுங்கள்:மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

அதனை தொடர்ந்து,  கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்கார வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

மேலும், கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியசாமி,  வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

இதை தொடர்ந்து, 16 வகை சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஓம குண்டம் வைக்கப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று. அதற்கு பின்பு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து,  சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.  இந்த திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement