For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோபி, சுதாகர் மீது காவல் நிலையத்தில் புகார் - ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் சிக்கலில்!

யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
03:21 PM Aug 07, 2025 IST | Web Editor
யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோபி  சுதாகர் மீது காவல் நிலையத்தில் புகார்   ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் சிக்கலில்
Advertisement

Advertisement

பிரபல யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’-ஐ நடத்திவரும் கோபி மற்றும் சுதாகர் மீது, சமூக மோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாகக் கூறி, கோவையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் புகார் அளித்துள்ளார்.

வழக்கறிஞர் கார்த்திக் தனது புகாரில், ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற வீடியோக்கள் சமுதாயத்தில் வன்முறையையும், வெறுப்பையும் தூண்டும் என்றும், இது சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கோபி மற்றும் சுதாகர் தரப்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், அவர்களின் ரசிகர்கள் பலர், 'பரிதாபங்கள்' வீடியோக்கள் கேளிக்கைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என்றும், அவை எந்த சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல என்றும் தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறை அதிகாரிகள் இந்த புகாரை ஏற்றுக்கொண்டு, இதுகுறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். வீடியோவின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஏதேனும் காட்சிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவிருக்கிறார்கள்.

Tags :
Advertisement