Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இசையமைப்பாளர் #yuvanshankarraja மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

07:48 AM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்ததாகவும், போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முறைப்படி எந்த தகவலும் அளிக்காமல் யுவன் சங்கர் ராஜா திடீரென வீட்டைக் காலி செய்து சென்றுவிட்டதாகவும், அவர் வீட்டைக் காலி செய்த தகவல் அருகில் வசிப்பவர்கள் மூலம் தான் தங்களுக்கு தெரியவந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் உள்ள பொருட்களை யுவன் சங்கர் ராஜா சேதப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வாடகை பாக்கியை வழங்காததாலும், சேதத்துக்கு நஷ்ட ஈடு தராததாலும் யுவன் சங்கர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகமது ஜாவித் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீதான இந்தப் புகார் சினிமா வட்டாரத்தில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
யுவன்சங்கர் ராஜாசென்னைChennaimusic directoryuvanshankar raja
Advertisement
Next Article