Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து துவக்கம்; பயணிகள் உற்சாகம்!

09:37 AM Nov 19, 2023 IST | Web Editor
Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது.

Advertisement

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை ரயில் பாதை அமைந்துள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது. மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து மலை ரயில் தண்டவாளம் சேதமடைந்தது.

இதனையடுத்து சேதமடைந்த ரயில் பாதையை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து
வந்தனர். மேலும் பருவமழை தீவிரம் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கடந்த பத்து நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்ய பட்டிருந்தது. இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்தும் ரத்து  செய்ய பட்டிருந்தது. 

இதனையடுத்து சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் முடிவுற்ற
நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு இன்று மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான
மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. பத்து நாட்கள் இடைவேளைக்கு பிறகு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு குன்னூர் சென்ற நிலையில் அதில் மிகுந்த உற்சாகத்துடன் பயணிகள் பயணித்தனர்.

Tags :
CoimbatoreMettupalayam-CoonoorMountain Rail ServiceNews7Tamilnews7TamilUpdatesrailwayTravellers
Advertisement
Next Article