For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆர்டர் செய்த தோசையிலிருந்து எட்டிப்பார்த்த 8 கரப்பான் பூச்சிகள் | அதிர்ந்து போன வாடிக்கையாளர் | வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

09:02 AM Mar 16, 2024 IST | Web Editor
ஆர்டர் செய்த தோசையிலிருந்து எட்டிப்பார்த்த 8 கரப்பான் பூச்சிகள்   அதிர்ந்து போன வாடிக்கையாளர்   வைரலாகும் அதிர்ச்சி  வீடியோ
Advertisement

டெல்லியின் கனாட் பிளேஸில் அமைந்துள்ள மெட்ராஸ் காபி ஹவுஸில் நடந்த இந்த பயங்கரமான அனுபவத்தை ஒரு பெண் வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

நீங்கள் சற்று விலை கூட இருந்தாலும் பரவாயில்லை என பிரபல பெரிய ஹோட்டலுக்கு உணவு உண்ணச் செல்வீர்கள். ஏனெனில் உணவில் எந்தத் தவறும் இருக்காது என ஒரு நம்பிக்கைக்காக. ஆனால், டெல்லியில் உள்ள பிரபல பெரிய ஓட்டலில் ஒரு பெண் ப்ளைன் தோசை ஆர்டர் செய்தபோது, ​​அதிலிருந்து ஒன்றிரண்டு அல்ல, 8 கரப்பான் பூச்சிகள் வெளிவந்தன.

இந்த சம்பவம் மார்ச் 7 ஆம் தேதி புது தில்லியின் புகழ்பெற்ற கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள மெட்ராஸ் காபி ஹவுஸில் நடந்தது, இது மிகவும் புகழ்பெற்ற உணவகமாக கருதப்படுகிறது.  இந்த பயங்கரமான அனுபவத்தை அந்த பெண் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் பின்னர் இது படு வைரலாகியுள்ளது.

இது குறித்து அந்த பெண், டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். தான் புகார் செய்தபோது, ​​உணவக உரிமையாளர் தன்னை மிரட்டி அமைதி காக்க முயன்றதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இதைப் படித்து பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

இந்த பயங்கரமான அனுபவத்தின் வீடியோவை இஷானி தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் பகிர்ந்துள்ளார்.

Tags :
Advertisement