Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை முதல் கடற்கரை - தாம்பரம் இரவு மின்சார ரயில் ரத்து!

08:42 AM Nov 28, 2023 IST | Web Editor
Advertisement

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (நவ.29) முதல் டிச.14-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புறநகர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். இது மக்களின் மிக முக்கிய போக்குவரத்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தெரிவித்ததாவது:

”பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (நவ.29) முதல் டிச.14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
#RailwayschengalpattuChennaiChennai Beachelectric trainkancheepuramNews7Tamilnews7TamilUpdatesSouthern RailwaysSuburbTambaramTamilNadu
Advertisement
Next Article