For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
02:47 PM Jun 19, 2025 IST | Web Editor
ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்   தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பலியான சுப்பிரமணி சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

Advertisement

இப்பள்ளியில் பயிலும் துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்
கல்லேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வசீகரன் இருவரும் பத்தாம் வகுப்பு படித்து
வருகின்றனர். இவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இரண்டு கோஷ்டிகளாக மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று(ஜூன்.19) காலை துந்தரிகம்பட்டு பகுதியில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் வரும்போது மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் பேருந்து விட்டு இறங்கி பள்ளிக்கு நடந்து வந்த போது ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மோதல் முற்றி ஒருவருக்கு ஒருவர் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் வசீகரன் தனது கையில் வைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான சாவியை எடுத்து சதீஷ்குமார் கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட பதிலுக்கு   வசீகரனும் சதீஷ்குமாரை பலமாக தாக்கி உள்ளார். இரண்டு மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்து அவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags :
Advertisement