For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#America - ல் விற்கப்படும் பட்டை தூளில் ஈயம் இருக்காம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

09:56 PM Oct 12, 2024 IST | Web Editor
 america   ல் விற்கப்படும் பட்டை தூளில் ஈயம் இருக்காம்   ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

அமெரிக்காவில் விற்கப்படும் 12 பிராண்ட் பட்டை தூளில் ஈயம் இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை பொடி வடிவில் பல பொருட்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் பேக்கிங், ஹாட் சாக்லேட், காபி, ஓட்ஸ் போன்றவற்றின் மேல் தூவி பரிமாறப்படுவதுண்டு.

ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நுகர்வோர் அறிக்கைகள் என்னும் இலாப நோக்கமற்ற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் விற்கப்படும் பட்டை தூள் மற்றும் பட்டை கலந்த மசாலா பொருட்களில் ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அதுவும் 12 பிராண்ட்டுகளின் பட்டை மற்றும் பட்டை கலந்த மசாலா பொருட்களில் அதிக அளவு ஈயம் இருப்பதாக நுகர்வோர் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

உணவு பாதுகாப்பு விஞ்ஞானிகள் 36 பிராண்டுகளின் பட்டை தூள் கலந்த பொருட்களை சோதனை செய்தனர். அந்த மசாலா பொருட்கள் அனைத்தும் கனெக்டிகட், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் ஆன்லைனில் உள்ள 17 கடைகளில் இருந்து வாங்கப்பட்டன. இந்த 36 பொருட்களில் 12 பிராண்ட்டுகளின் பட்டை தூள் கலந்த பொருட்களில் 1 ppm-க்கும் அதிகமான அளவில் ஈயம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிராண்டுகளின் பட்டை பொடியை வெறும் 1/4 டீஸ்பூனை எடுப்பது, ஒரு நாள் முழுவதும் நீங்கள் உட்கொள்ள வேண்டியதை விட அதிக ஈயம் உள்ளது என்று நுகர்வோர் அறிக்கையின் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் சோதனை இயக்குனர் ஜேம்ஸ் ரோஜர்ஸ் கூறுகிறார்.

எனவே உங்களிடம் இந்த பிராண்ட்டுகளில் ஒன்று இருந்தாலும், அவற்றை தூக்கி எறிந்து விடவும் அவர் கூறுகிறார். ஏனெனில் பொதுவாக ஈயத்தை சிறிது எடுத்தாலே அது ஆபத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த ஈயமானது அப்படியே உடலில் தங்கி எதிர்பாராத பல மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

நுகர்வோர் அறிக்கையின் படி, மக்கள் தவிர்க்க வேண்டிய பட்டை தூள் மற்றும் பட்டை கலந்த மசாலா பொருட்களை விற்கும் பிராண்ட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அவை:

1. பராஸ் இலவங்கப்பட்டை தூள் (3.52 ppm)

2. EGN இலவங்கப்பட்டை தூள் (2.91 ppm)

3. மிமியின் தயாரிப்புகள் கிரவுண்ட் இலவங்கப்பட்டை (2.03 ppm)

4. பௌல் & பேஸ்கட் கிரவுண்ட் இலவங்கப்பட்டை (1.82 ppm)

5. ராணி பிராண்ட் இலவங்கப்பட்டை (1.39 ppm)

6. ஜாரா ஃபுட்ஸ் இலவங்கப்பட்டை தூள் (1.27 ppm)

7. த்ரி ரிவர்ஸ் இலவங்கப்பட்டை தூள் (1.26 ppm)

8. யூ யீ பிராண்ட் ஃபைவ் மசாலா தூள் (1.25 ppm)

9. BaiLiFeng ஃபைவ் மசாலா தூள் (1.15 ppm)

10. ஸ்பைசி கிங் ஃபைவ் மசாலா தூள் (1.05 ppm)

11. பாடியா இலவங்கப்பட்டை தூள் (1.03 ppm)

12. டீப் இலவங்கப்பட்டை தூள் (1.02 ppm)

ஈயத்தை அதிகம் உட்கொண்டால் சந்திக்கும் பிரச்சனைகள்

ஈயத்தை ஒருவர்அதிகமாக உட்கொண்டால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை மிகவும் கடுமையாக பாதிக்கும். குழந்தைகள் ஈயத்தை அதிகம் எடுக்கும் போது, அது அவர்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தும், கற்பதில் சிரமத்தை உண்டாக்கும், எரிச்சலுணர்வை அதிகரிக்கும், எடை இழப்பு மற்றும் காது கேளாமை பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் குழந்தைகள் நீண்ட காலமாக ஈயத்தை உட்கொண்டு வந்தால், அது அறிவாற்றலைக் குறைக்கும், கவனக்குறைவு குறைபாடுகள் மற்றும் நடத்தை சிக்கல்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

பெரியவர்கள் ஈயத்தை அதிகமாக உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்தம், மூட்டு மற்றும் தசை வலி, நினைவாற்றல் அல்லது கவனிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக கடுமையான தலைவலியால் அவதிப்படக்கூடும். இன்னும் தீவிரமான சந்தர்ப்பங்களில், இது அடிவயிற்று வலி, மனநிலை கோளாறுகள், இனப்பெருக்க பிரச்சனை, ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம். கர்ப்பிணிப் பெண்கள் ஈயத்தை அதிகமாக எடுத்தால், அது கருச்சிதைவு, குறைமாதத்தில் குழந்தை பிறப்பது மற்றும் வளர்ச்சியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் நீண்ட காலமாக ஒருவர் ஈயத்தை உட்கொண்டு வந்தால், அது சிறுநீரக சேதம் மற்றும் பலவீனமான நரம்பியல் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

Tags :
Advertisement