Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சி.ஏ படிக்க விரும்பும் சின்னத்துரை! நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!

02:27 PM May 06, 2024 IST | Web Editor
Advertisement

சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 2 பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று அசத்திய நிலையில் எதிர்காலத்தில் சி.ஏ படிக்க விடும்புவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி.  இவரது மனைவி அம்பிகாபதி.  முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார்.  இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும்,  14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர்.  இவர்களது வீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் 3 பேர் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.  இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர்.

விசாரணையில் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது.  இந்த கொடூர நிகழ்வு தமிழ்நாட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியது.

இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில் 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.  இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வை எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி அசத்தியுள்ளார்.

இந்நிலையில்,  பி.காம் மற்றும் சி.ஏ படிக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்று மாணவன் சின்னத்துரை நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

Tags :
12thResultnews7 tamilNews7 Tamil UpdatesPlus2Result 2024ResultsstudentsTamilNadutn schools
Advertisement
Next Article