சாக்கடை மேல் மூடிக்குள் மாட்டிக்கொண்ட குழந்தையின் கால் | பத்திரமாக மீட்ட இளைஞர்கள்!...
07:35 AM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement
சாக்கடை மேல் மூடிக்குள் மாட்டிக்கொண்ட ஒன்றரை வயது பெண் குழந்தையின் காலை அப்பகுதி இளைஞர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர்.
Advertisement
பழைய வண்ணாரப் பேட்டை தட்டான் குளம் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது தெருவில் உள்ள சாக்கடையின் மேழ மூடப்பட்டுள்ள மேல் மூடியில் உள்ள சிறிய ஓட்டையில் குழந்தையின் காலானது மாட்டிக்கொண்டுள்ளது.
குழந்தை உடனடியாக அழவே, உடனடியாக அந்த பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலர் குழந்தையின் காலினை குழந்தைக்கு வலிக்காமல் பொறுமையாக வெளியே எடுத்துள்ளனர்.
அந்த பகுதி இளைஞர்களின் துரித செயலால் குழந்தை எந்த வித பாதிப்பும் இன்றி
மீண்டிருந்தாலும், இது போன்று வீதிகளிலும் தெருக்களிலும் போடப்பட்டுள்ள சாக்கடை மூடிகள் சரியான முறையில் போட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.