For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 
10:58 AM Dec 04, 2025 IST | Web Editor
ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Advertisement

ஏவிஎம் செட்டியாரின் மூன்றாவது மகன் ஏவிஎம் சரவணன். தனது தந்தைக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவர் 1958ல் இருந்து ஏவிஎம் நிறுவனத்தின் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல படங்களை இவர் தயாரித்துள்ளார். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் ஏவிஎம் சரவணன்.

Advertisement

இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏ.வி.எம் சரவணன், ஒரு மாதத்திற்க முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதங்களாக வசித்து வந்தார். சமீபத்தில் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நல பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், ஏவிஎம் சரவணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86. ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Tags :
Advertisement