Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை" - #EPS புகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

11:55 AM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Advertisement

திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின இன்று நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில்,  அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.ஆர். பெரியகருப்பன், ஆர். காந்தி, அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் திருமண விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவ சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் மற்றும் திருவொற்றியூர் தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடுபவர் கே.பி.சங்கர் என தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது :

மக்கள் எளிதில் அணுகும் பிரதிநிதியாக இருந்து சிறப்பாக பணியாற்றி வருபவர் கே.பி.சங்கர். சிறையில் இருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.பி.சங்கர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது போன்று வேறு எந்த விழாவும் இந்தியாவில் நடந்ததில்லை. கருணாநிதியின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் சென்று பார்வையிட்டார். கருணாநிதி பெயரால் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கருணாநிதியின் பெயரில் கிண்டியில் உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. கருணாநிதி பெயரில் 1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

கருணாநிதி நாணயத்தில் இந்தியில் எழுத்துகள் இருப்பதாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு நாட்டு நடப்பு தெரிந்திருக்க வேண்டும் அல்லது அரசியலாவது தெரிந்திருக்க வேண்டும். ஏற்கனவே எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதை எடப்பாடி பழனிசாமி பார்த்திருக்க மாட்டார். அண்ணாவுக்கு நாணயம் வெளியிட்டபோது அவருடைய தமிழ் கையெழுத்து இடம்பெறச் செய்தார் கருணாநிதி.

கருணாநிதி வழியில் அவருக்கு நாணயம் வெளியிட்டபோது அவருக்கு பிடித்த வார்த்தையான தமிழ் வெல்லும் என்ற வார்த்தை சேர்கப்பட்டுள்ளது. தமிழ் வெல்லும் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை பார்க்க கூட மனமில்லாத பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக வாய்த்திருக்கிறார். கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அழைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் #NewChiefSecretary முருகானந்தம்! யார் இவர்?

கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது மத்திய அரசு, திமுக அல்ல. மத்திய அரசு நாணயத்தை வெளியிட்டதால் தான் மத்திய அமைச்சரை அழைத்து விழா நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். நாணய வெளியீட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை  மத்திய அரசு ஏற்கவில்லை. மத்திய அமைச்சர்கள் வர மறுத்துவிட்ட காரணத்தால் தான் எடப்பாடி பழனிசாமியே எம்.ஜி.ஆர். நாணயத்தை வெளியிட்டார். ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம்கூட நடத்த முடியாதவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி பேச தகுதியற்றவர்கள். ஜெயலலிதா மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு இரங்கல் கூட்டத்தையாவது நடத்தியுள்ளார்களா?.

ராஜ்நாத் சிங்கை அழைத்து விழா நடத்தியதால் பாஜக-வுடன் திமுக ரகசிய உறவு என்று பழனிசாமி கூறியுள்ளார்.பாஜகவுடன் எந்த ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுக எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அந்த நிலைப்பாட்டில் வெளிப்படையாகவும் உறுதியுடனும் இருக்கும். தமிழ்நாட்டுக்கான உரிமைகளை எக்காரணத்தை கொண்டும் திமுக விட்டுக்கொடுக்காது"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
AIADMKDMKEdappadiPalaniswamiKalaignarCentenaryCommemorativeCoinKalaingarForeverMKStalinRajnathSingh
Advertisement
Next Article