For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

TNPL கிரிக்கெட் போட்டி - திருப்பூரை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது சேப்பாக் அணி!

07:21 AM Jul 11, 2024 IST | Web Editor
tnpl கிரிக்கெட் போட்டி   திருப்பூரை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது சேப்பாக் அணி
Advertisement

திருப்பூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இதன்மூலம் இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

Advertisement

எட்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் 8-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்கள் ஒருபுறம் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க இன்னொருபுறம் திருப்பூர் வீரர் கணேஷ் சேப்பாக் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து கொண்டிருந்தார்.

ஆனாலும் இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். சேப்பாக் அணி தரப்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

Tags :
Advertisement