For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விபத்தில் சிக்கிய சென்னை மேயர்!

09:50 PM Feb 23, 2024 IST | Web Editor
விபத்தில் சிக்கிய சென்னை மேயர்
Advertisement

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனின் கார் மீது லாரி மோதி விபத்து நேர்ந்துள்ளது.

Advertisement

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அவர் காரின் முன்னே சென்றுகொண்டிருந்த கார் வளைவில் திரும்பியுள்ளது. இதனால் திடிரென எதிர்பாரதவிதமாக மேயர் பிரியாவின் கார் அந்த கார் மீது மோதியுள்ளது.

இதனைத்தொடர்ந்து மேயர் பிரியாவின் கார் நின்றதால், பின்னால் வந்த லாரி கார் மீது மோதியுள்ளது. இதனால் காரின் இருபுறமும் சேதமடைந்துள்ளது. விபத்தால் காரின் டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. விபத்தால் மேயர் பிரியாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மேயர் பிரியா புறப்பட்டு சென்றார். விபத்தில் சிக்கிய வாகனங்களை பறிமுதல் செய்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement