For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கொடூர தந்தை -தொடர்ந்து 3வதாக பெண் குழந்தை பிறந்ததால் வெறிச்செயல்!

09:18 AM Jul 19, 2024 IST | Web Editor
குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கொடூர தந்தை  தொடர்ந்து 3வதாக பெண் குழந்தை பிறந்ததால் வெறிச்செயல்
Advertisement

பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை, தந்தையே கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

சென்னை வியாசர்பாடி சுந்தரம் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்
(38) - விஜயலட்சுமி தம்பதி. ராஜ்குமார் மீன் பாடி வண்டி ஓட்டும் தொழில்
செய்து வருகிறார்.  இவர்களுக்கு 5 மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், கடந்த 7ம் தேதி பிறந்து ஒன்பது நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் கத்தியால் குத்தியது போல் காயங்கள் இருந்ததை, பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாயார் உடனடியாக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ம் தேதி குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.  இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், குழந்தையின் தந்தை ராஜ்குமாரே குழந்தையை கத்தரிக்கோலால்  3 முறை குத்தி கொலை செய்தது தெரியவந்தது.  அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ராஜ்குமார் தெரிவித்தார். ராஜ்குமாரை கைது செய்த வியாசர்பாடி போலீசார், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement