For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்!

02:08 PM Jun 05, 2024 IST | Web Editor
பிரதமர் மோடி குறித்த சந்திரபாபு நாயுடு பழைய பதிவு இணையத்தில் வைரல்
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி குறித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பழைய பதிவு  தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.  மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான INDIA கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.  காங்கிரஸ் 99 தொகுதிகள்,  சமாஜவாதி 39 தொகுதிகள்,  திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகள்,  திமுக 21 தொகுதிகள்,  தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளார். இந்நிலையில்,  தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு 2019 ஆம் ஆண்டு தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து பதிவிட்டிருந்தது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள் : "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்" - சந்திரபாபு நாயுடு

அப்பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது:

"மோடி இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்களை திட்டமிட்டு அழித்துவிட்டார்.  பாஜக ஆட்சியில் நிறுவன சுயாட்சியும்,  ஜனநாயகமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.  மேலும், சிபிஐ-யிலிருந்து ரிசர்வ வங்கி வரை,  அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் கூட இதிலிருந்து விடுபடவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது,  பிரதமர் மோடிக்கு,  சந்திரபாபு நாயுடு ஆதரவளிக்கவுள்ள நிலையில், இப்பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
Advertisement