For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்" - உச்சநீதிமன்றம் கண்டனம்!

09:31 PM Feb 05, 2024 IST | Web Editor
“சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்    உச்சநீதிமன்றம் கண்டனம்
Advertisement

"சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இந்த ஆண்டு  மே 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.

ஜன.30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.  35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:  பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!

இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கும், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:

"சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும்.  ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் நான் இதனை பார்க்கிறேன்.  தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நிச்சயமாக அந்த நபர் விசாரிக்கப்பட வேண்டும்.  செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கொள்ளக்கூடாது.  ஆனால் இது எல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியாதா?"

இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்..

Tags :
Advertisement