For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காலை 10 மணி வரை எங்கெல்லம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
08:14 AM Aug 10, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காலை 10 மணி வரை எங்கெல்லம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்பபுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement