எட்டு மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
08:43 AM Jun 25, 2025 IST | Web Editor
Advertisement
இன்று(ஜூன்.25) 10 மணி மழை பெய்யுள்ள மாவட்டங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாட்டால் இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது.
Advertisement
மேலும் தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், தேனி. திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.