மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10:45 AM Jun 16, 2025 IST | Web Editor
Advertisement
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Advertisement
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் , திண்டுக்கல், தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மலை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.