For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 7 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11:07 AM Jun 24, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 7 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 7 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், நெல்லை, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement