For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

10:42 AM Jan 08, 2024 IST | Web Editor
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்:  பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி.!

மேலும் சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement