For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு...?

தமிழ் நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08:11 PM Dec 06, 2025 IST | Web Editor
தமிழ் நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரு இடங்களிலும் லேசான இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement