For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:44 AM Jul 15, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Tags :
Advertisement