For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிற்பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

பிற்பகல் 1 மணி வரை தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12:12 PM Aug 09, 2025 IST | Web Editor
பிற்பகல் 1 மணி வரை தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Advertisement

இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணி வரை தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement