For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு!

04:52 PM Apr 01, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்றும்  நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

‘தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.  கடந்த 24 மணிநேரத்தில் நீடாமங்கலம் 2, நாகுடி, கமுதி தலா ஒரு சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.  ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.  தென் இந்தியப் பெகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  வட தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,  காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காரணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement