For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்...

08:08 AM Nov 03, 2023 IST | Web Editor
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Advertisement

வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வருகின்ற 6 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன் ஒரு பகுதியாக, நேற்றிரவு அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களி மிதமான மழை பெய்தது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பொழிந்தது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement