Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாம்பியன்ஸ் டிராபி : பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. எவ்வளவு தெரியுமா ?

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுதொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
04:03 PM Feb 14, 2025 IST | Web Editor
Advertisement

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் விளையாடவுள்ளன.

இதில் இந்திய அணியின் முதல் போட்டியானது பிப்ரவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வங்கதேச அணியுடன் இந்தியா மோதுகிறது. பிப்ரவரி 23ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நடக்கவிருக்கும் சாம்பியன் டிராபி போட்டிகான பரிசுத் தொகையை 53 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.19.44 கோடி பரிசுதொகை வழங்கவுள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ 9.72 கோடியும், அரையிறுதியில் தோல்வி அடையும் அணிளுக்கு தலா ரூ 4.86 கோடியும் பரிசுத்தொகை கிடைக்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

Tags :
Champions Trophy 2025CricketICCPrice AmountSports
Advertisement
Next Article