Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அரசு வரிப்பகிர்வு - தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

10:50 PM Feb 29, 2024 IST | Web Editor
Advertisement

வரிப்பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,797 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, மாநிலங்களில் சமூக நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியளிக்கும் விதமாக 1,42,122 கோடி ரூபாயை விடுவித்துள்ளாதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,797 கோடியும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 25,495 கோடி ரூபாயும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான மொத்த நிதியாக ரூ. 1, 42,122 கோடி வரிப்பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி மாநில வாரியாக கொடுக்கப்பட்டுள்ள நிதிப் பகிர்வாவது:

குறிப்பிடத்தகுந்த சில மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிப்பகிர்வு விவரம்:

 

Tags :
BJPministry of financeNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesState GovernmentsTamilNadutaxTax Devolutionunion government
Advertisement
Next Article