Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்” - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக விழுப்புரம் நாடாளுமன்ற எம்.பி. ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
07:00 PM Aug 19, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக விழுப்புரம் நாடாளுமன்ற எம்.பி. ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய அரசானது தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக நூல் பதிவில்,  “ ராஜாராம் மோகன்ராய் லைப்ரரி ஃபவுண்டேஷனால் 204-15 முதல் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட / ஒப்புதல் தரப்பட்ட / நிராகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்களையும் அந்தத் திட்டங்கள் நிறைவு பெற்றனவா என்ற விவரங்களையும் தருக என்று கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு எழுத்துபூர்வமாக விடையளித்த கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்கள் வாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட / விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு என்ற விவரங்களை அளித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தமுள்ள பொது நூலகங்களில் நான்கில் மூன்று பங்கு தென் மாநிலங்களில்தாம் உள்ளன. ஆனால் குஜராத் மாநிலத்துக்கு அதிக அளவிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்தவரை ஒப்பீட்டளவில் அதிக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு (2021) நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.
2014-15 ஆம் ஆண்டில் 4571 திட்டங்களுக்கு ரூ 51634057 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2015-16 ஆம் ஆண்டில் 2303 திட்டங்களுக்கு ரூ 59176420 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2016-17 ஆம் ஆண்டில் 4534 திட்டங்களுக்கு ரூ 6329493 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2017-18 ஆம் ஆண்டில் 5207 திட்டங்களுக்கு ரூ100711709 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2018-19 ஆம் ஆண்டில் 1062 திட்டங்களுக்கு ரூ 96605385 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2019- 20 ஆம் ஆண்டில் 1651 திட்டங்களுக்கு ரூ 39838421 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2020- 21 ஆம் ஆண்டில் 1126 திட்டங்களுக்கு ரூ 20302195 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2021- 22 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்கு ரூ 1527705 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2022- 23 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்கு ரூ 1440000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2023- 24 ஆம் ஆண்டில் 1071 திட்டங்களுக்கு ரூ 40313606 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2024- 25 ஆம் ஆண்டில் 2 திட்டங்களுக்கு ரூ 375000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து 1087 திட்டங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்குவதில் எப்படி ஒன்றிய பாஜக அரசு அரசியல் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Tags :
centralgovermentlatestNewslibrarifundmpravikumarTNnews
Advertisement
Next Article