For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் உயிரிழப்பு!

09:37 AM Feb 26, 2024 IST | Web Editor
நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல்  2 பேர் உயிரிழப்பு
Advertisement

நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மீன் பிடிக்கும் ஆயுதங்களால் தாக்கி கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

நாகை அருகை நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் பைபர் படகின் மீது விசைப்படகு மோதியதில், பைபர் படகின் மீன்வலை சேதமானதாக மீனவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலில் மீன்பிடிக்கும் ஆயுதங்களால் தாக்கி கொண்டுள்ளனர்.  இந்த தாக்குதலின் போது,  பைபர் படகில் இருந்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிவநேசசெல்வம் (25) என்பவர் உயிரிழந்தார்.  காலாத்திநாதன்(22) என்பவர் கடலில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.

மேலும்,  மோதலின் போது படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு மீனவர் ஆத்மநாபன் என்பவரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  சிவநேச செல்வம் உடல் மீட்கப்பட்ட நிலையில், கலாத்திநாதன் உடலை மீனவர்கள் தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement