நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த 27.07.2025ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் சகோதரரான சுர்ஜித் அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இதுவரை சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவம் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி தமிழக அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி கொலை தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சிபிசிஐடி காவல்துறை சுர்ஜித்தின் தாய் கிருஷ்ண குமாரிக்கு சம்மன்அனுப்பியுள்ளது. அந்த சம்மனில்,சுர்ஜித்தின் தாய் கிருஷ்ண குமாரி வருகின்ற 15ம் தேதிக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த கொலை வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.