For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காவிரி விவகாரம் - அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

11:43 AM Jul 16, 2024 IST | Web Editor
காவிரி விவகாரம்   அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்
Advertisement

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.

Advertisement

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவு குறித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.  இறுதியில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு எடுக்கப்பட்டது.  மேலும் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகனின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் வில்சன் எம்பி, திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி , அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி மற்றும் ஓ.ஏஸ்.மணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து செல்வப்பெருந்தகை மற்றும் ராஜேஸ் குமார்,  விசிக, பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம், மதிமுக, கொமதேக, தவாக, மமக, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement