Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
06:32 PM Feb 05, 2025 IST | Web Editor
Advertisement

நீலகிரி மாவட்டம், சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்த தமிழக அரசு, உதகமண்டலம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்தும் அரசு உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்ததுடன், சேகூர் பகுதியில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ரிசார்ட் தரப்பு குறைகளை விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, சேகூர் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள நிலங்களை தனியார் வனமாக அரசு அறிவித்த 1991ம் ஆண்டுக்குப் பின், அந்தப் பகுதியில் நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags :
Elephant CorridorsMadrasHCNilgiriTNGovt
Advertisement
Next Article