Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பரங்குன்றம் மலை வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்கு - 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலை வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
10:17 PM Jun 24, 2025 IST | Web Editor
திருப்பரங்குன்றம் மலை வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
Advertisement

திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு உரிமை தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று(ஜூன்.24) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையில் நீதிபதி நிஷா பானு,  “திருப்பரங்குன்றம் மலை தொடர்பான சர்ச்சையில், அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதி, அதை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்கள் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.

Advertisement

ஆனால் நீதிபதி ஸ்ரீமதி,  “திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும். சிக்கந்தர் மலை அல்லது சமணர் குன்றம் என்று அழைக்கக்கூடாது. ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகளின் போது கந்தூரி விலங்குகளை பலியிடுதல் மற்றும் பிரார்த்தனை செய்யும் நடைமுறையை உறுதி செய்ய தர்கா நிர்வாகம் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சந்தனக்கூடு திருவிழாவை நடத்தலாம்.

காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு மாலை 6 மணிக்குப் பிறகு யாரையும் அனுமதிக்கக் கூடாது . எனவே அங்கு மின்சார இணைப்பு தேவையில்லை. சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் கழிப்பறை வழங்கப்பட்டால் மலை சேதமடையும், எனவே அவை வழங்கப்படாது. திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய தொல்லியல்துறையை அனுமதிக்க வேண்டும்” என்ற மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதன் காரணமாக இந்த வழங்கு 3வது நீதிபதி விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
Madurai HCSikandar Pasha Hillthiruparankundram
Advertisement
Next Article