Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Formula4carrace -க்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

12:36 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட அவசர வழக்கு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பி.என்.எஸ். பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பட்டியலிடப்படாத நிலையில், இந்த வழக்கை இன்று அல்லது நாளை விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை நாளை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Tags :
BJPCar RaceChennaiFormula 4 Car RaceFormula CarHigh courttamil nadu
Advertisement
Next Article