For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து | கேரள தம்பதி உயிரிழப்பு!

11:45 AM Dec 08, 2023 IST | Web Editor
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து   கேரள தம்பதி உயிரிழப்பு
Advertisement

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் மேல் இன்று காலை வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்கள்: அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இதில், காரில் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது போலீசாரின் முதல்கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநில பதிவெண் கொண்ட கார்,  சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.  அந்த கார் தற்போது கார் மீட்கப்பட்டு உள்ளது.
மேலும் விபத்தில் பலியான தம்பதியின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement