For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேப்டன் விஜயகாந்த்தின் நிறைவேறாத ஆசைகள்...!

08:02 AM Dec 29, 2023 IST | Web Editor
கேப்டன் விஜயகாந்த்தின் நிறைவேறாத ஆசைகள்
Advertisement

மறைந்த தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த்தின் நிறைவேறாத ஆசைகளாக கூறப்படும் 2 நிகழ்வுகளை பற்றி காணலாம்...

Advertisement

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது.

இன்று பிற்பகல் 1மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

நிறைவேறாத ஆசைகள்:

விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கு ‘விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாத்துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. தன் மகன்களின் திருமணத்தை நடத்த விஜயகாந்த் முயற்சி எடுத்து வந்தார். விஜய பிரபாகரனுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் மகன்கள் திருமணத்தை நடத்த முடியவில்லை. ஆனாலும், மகன்களின் திருமணத்தைநடத்த விஜயகாந்த் மும்மரமாக இருந்தார். ஆனால், அவரின் உடல் நிலை தீவிர பாதிப்புக்கு உள்ளாகி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரால் தன் மகன்களின் திருமணத்தை கடைசி வரை பார்க்க முடியாமல் போய்விட்டது. 

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக ஒரு வீட்டை விஜயகாந்த் கட்டி வந்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வடைந்த நிலையில், அண்மையில் மீண்டும் பணிகள் வேகமெடுத்தன. தற்போது 90% பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே பால் காய்ச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தால் பங்கேற்க முடியவில்லை எனத் தெரிகிறது. அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags :
Advertisement